Monday, 15 November 2010
தாளிக்கிற பொழுது
தாளிக்கிற பொழுது என்றும் கடுகு போட்டதும் ஒரு மூடி போட்டு மூடிவிடவும்.தீயை அணைத்த பிறகு கறிவேப்பிலையும் போட்டு மூடி விடவும்..இப்படி செய்தால் சமையல் மேடை எல்லாம் எண்ணை பிசுபிசுப்பாக இருக்காது.
Sunday, 14 November 2010
child proofing
அதாவது சின்ன குழந்தைகளை தைரியமாக நாமே ஒரு ஐந்து நிமிடம் கண் படாமல் போனால் கூட ஆபத்தில்லாமல் தனியாக விடக் கூடிய அளவுக்கு வீட்டை தயார்படுத்துவது தான் இது.
இதனை செய்ய குழந்தை பிறந்து தவழும் வரை காத்திருக்க தேவையில்லை ஏன்னா அப்ப நேரம் பத்தாது.பிரசவத்துக்கு முன்னமே இதனை செய்து விடுவது நல்லது.
பொதுவாகவே குழந்தைகளுக்கான எந்த பொருளுக்கும் விலை அதிகம் தான்...ஏன்னா நமக்குன்னா கூட வேண்டாம் என்று அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம் பிள்ளைகளுக்குன்னா விலையை பற்றி அதிகம் யோசிக்க மாட்டோம்.
எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் டிப்ஸ்
1)முதலில் மாடிப்படி இருந்தால் அங்கு ஒரு தடுப்பு வைக்கவும்...இல்லையென்றால் குழந்தைகளை அதிலிருந்து இறக்கவே ஒரு ஆளை நியமிக்க வேண்டும்.
2)மெயின் டோர் ,கிச்சன் இதற்கு தடுப்பு வைப்பது ரொமவே அவசியம்..ஊரில் என்றால் நாம் விரும்பிய மாதிரி சின்ன மரத்தாலான தடுப்பு நாமே செய்ய கொடுக்கலாம்
3)எல்லா அலமாரிகளுக்கும்,குளிர்சாதரனபெட்டிக்கும் நல்லதொரு சைல்ட் லாக் வைத்து விடலாம்.
4)கூர்மையான முனை கொண்ட ஃபர்னிசர்கள் இருந்தால் அதன் ஓரங்களில் மண்டை இடித்தாலும் பெரிசா அடிபடாத்ற்கான கார்னர் குஷன்ஸ் கிடைக்கும்..அதனை பொருத்தி விடலாம்
5)வீட்டிலுள்ள எல்லா கூர்மையான பொருட்கள்,முக்கியமான பொருட்கள் மற்றும் இதர திரவங்கள்,ஸ்ப்ரே முதலியவற்றை குழந்தையின் கைபடாதவாறு முன்னமே இடம் மாற்றி விடலாம்..ரொம்ப அதிகம் செலவில்லாமல் சின்ன சின்ன பலகைகள் கிடைக்கும் அதனை சுவற்றில் ஆங்காங்கு பொருத்தி விட்டால் எல்லாத்தையும் ஸ்டோரேஜ் பாக்சில் போட்டு உள்ளே வைத்து விடலாம்
6)டைனிங் டேபிளில் என்றுமே வைத்திருக்கும் எண்ணை,சாஸ்,உப்பு சர்க்கரை கூட குழந்தைகள் விட்டு வைக்காமல் ஏறி எடுக்கும்..டைனிங் டேபிளில் மேலும் இப்படி மரப்பலகைகளை பொருத்தினால் அங்கு அத்தியாவசிய பொருட்களை வைக்கலாம்
7)ஃபோனை மேலே ஆணி அடித்து மாட்டி விடலாம்
8)இப்பல்லாம் ஒரு ஸ்டைல் சாவிய மறந்து வெளிய போனால் புருஷன் ஆஃபீசிலிருந்து சாவிய கொண்டு வந்து தரும்வரை நாம தெருவில் தான்..சின்ன குழந்தைகளை உள்ளே வைத்துக் கொண்டு சும்மா ஒரு கார்பேஜ் ரூமுக்கு என்னவோ நியாபகத்தில் போனால் கூட இப்படி நேரலாம்..கூடுமானவரை இம்மாதிரியான கொடைச்சல்களை மாற்றி விட்டு சாதா அந்தகால தாழ்ப்பாளகளை வைப்பது தான் நல்லது.
எல்லா ரூமுக்கு வெளியேயும் குட்டி தாழ்ப்பாளை பொருத்தினால் உபயொகித்தாத நேரம் ரூமை அடைத்து போடலாம்
9)ஜன்னல் பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் உட்கார்ந்தோம் என்றால் அழகு போனாலும் பரவாயில்லையென்று சோஃபாவை அங்கிருந்து மாற்றி வேறிடத்தில் வைக்கலாம்...வெளிநாட்டில் ஜன்னல்களுக்கு தடுப்புகம்பிகள் அதிகம் வைப்பதில்லை...பிள்ளைகள் குதிக்கும் கதைகளை அடிக்கடி கேட்கிறோம்
10)எல்லா பவர் சாக்கெட்டிலும் குழந்தைகள் விரல் நுழையாதவாறு பொருத்தப்படும் தடுப்புகளை பொருத்திக் கொள்ளவும்..இது ரொம்பவே முக்கியம்
11)கதவுகளில் கைவைத்தால் விரல் நசுங்கி விடும்..இதனை தடுக்கவும் டோர் ஸ்டாப்பர் கிடைக்கும்.இதனை கதவுகளில் பொருத்தி வைப்பதோடு அடுத்தவர்கள் வீட்டுக்கு போகிறபொழுது முக்கியமாக கைப்பைய்யில் போட்டு எடுத்து செல்ல வேண்டும்.
குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில் எல்லா வாண்டுகளும் கதவை அடைத்து தான் விளையாடும் ..நாம் குழந்தை உள்ள அறை கதவில் பொருத்தி விட்டு நம்ம அரட்டையை பார்க்கலாம்
மேலே சொன்ன பல பொருட்களும் ஒரு கிட் டாகவே குழந்தைகளுக்கான கடைகளில் கிடைக்கும்..
இதனை செய்ய குழந்தை பிறந்து தவழும் வரை காத்திருக்க தேவையில்லை ஏன்னா அப்ப நேரம் பத்தாது.பிரசவத்துக்கு முன்னமே இதனை செய்து விடுவது நல்லது.
பொதுவாகவே குழந்தைகளுக்கான எந்த பொருளுக்கும் விலை அதிகம் தான்...ஏன்னா நமக்குன்னா கூட வேண்டாம் என்று அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம் பிள்ளைகளுக்குன்னா விலையை பற்றி அதிகம் யோசிக்க மாட்டோம்.
எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் டிப்ஸ்
1)முதலில் மாடிப்படி இருந்தால் அங்கு ஒரு தடுப்பு வைக்கவும்...இல்லையென்றால் குழந்தைகளை அதிலிருந்து இறக்கவே ஒரு ஆளை நியமிக்க வேண்டும்.
2)மெயின் டோர் ,கிச்சன் இதற்கு தடுப்பு வைப்பது ரொமவே அவசியம்..ஊரில் என்றால் நாம் விரும்பிய மாதிரி சின்ன மரத்தாலான தடுப்பு நாமே செய்ய கொடுக்கலாம்
3)எல்லா அலமாரிகளுக்கும்,குளிர்சாதரனபெட்டிக்கும் நல்லதொரு சைல்ட் லாக் வைத்து விடலாம்.
4)கூர்மையான முனை கொண்ட ஃபர்னிசர்கள் இருந்தால் அதன் ஓரங்களில் மண்டை இடித்தாலும் பெரிசா அடிபடாத்ற்கான கார்னர் குஷன்ஸ் கிடைக்கும்..அதனை பொருத்தி விடலாம்
5)வீட்டிலுள்ள எல்லா கூர்மையான பொருட்கள்,முக்கியமான பொருட்கள் மற்றும் இதர திரவங்கள்,ஸ்ப்ரே முதலியவற்றை குழந்தையின் கைபடாதவாறு முன்னமே இடம் மாற்றி விடலாம்..ரொம்ப அதிகம் செலவில்லாமல் சின்ன சின்ன பலகைகள் கிடைக்கும் அதனை சுவற்றில் ஆங்காங்கு பொருத்தி விட்டால் எல்லாத்தையும் ஸ்டோரேஜ் பாக்சில் போட்டு உள்ளே வைத்து விடலாம்
6)டைனிங் டேபிளில் என்றுமே வைத்திருக்கும் எண்ணை,சாஸ்,உப்பு சர்க்கரை கூட குழந்தைகள் விட்டு வைக்காமல் ஏறி எடுக்கும்..டைனிங் டேபிளில் மேலும் இப்படி மரப்பலகைகளை பொருத்தினால் அங்கு அத்தியாவசிய பொருட்களை வைக்கலாம்
7)ஃபோனை மேலே ஆணி அடித்து மாட்டி விடலாம்
8)இப்பல்லாம் ஒரு ஸ்டைல் சாவிய மறந்து வெளிய போனால் புருஷன் ஆஃபீசிலிருந்து சாவிய கொண்டு வந்து தரும்வரை நாம தெருவில் தான்..சின்ன குழந்தைகளை உள்ளே வைத்துக் கொண்டு சும்மா ஒரு கார்பேஜ் ரூமுக்கு என்னவோ நியாபகத்தில் போனால் கூட இப்படி நேரலாம்..கூடுமானவரை இம்மாதிரியான கொடைச்சல்களை மாற்றி விட்டு சாதா அந்தகால தாழ்ப்பாளகளை வைப்பது தான் நல்லது.
எல்லா ரூமுக்கு வெளியேயும் குட்டி தாழ்ப்பாளை பொருத்தினால் உபயொகித்தாத நேரம் ரூமை அடைத்து போடலாம்
9)ஜன்னல் பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் உட்கார்ந்தோம் என்றால் அழகு போனாலும் பரவாயில்லையென்று சோஃபாவை அங்கிருந்து மாற்றி வேறிடத்தில் வைக்கலாம்...வெளிநாட்டில் ஜன்னல்களுக்கு தடுப்புகம்பிகள் அதிகம் வைப்பதில்லை...பிள்ளைகள் குதிக்கும் கதைகளை அடிக்கடி கேட்கிறோம்
10)எல்லா பவர் சாக்கெட்டிலும் குழந்தைகள் விரல் நுழையாதவாறு பொருத்தப்படும் தடுப்புகளை பொருத்திக் கொள்ளவும்..இது ரொம்பவே முக்கியம்
11)கதவுகளில் கைவைத்தால் விரல் நசுங்கி விடும்..இதனை தடுக்கவும் டோர் ஸ்டாப்பர் கிடைக்கும்.இதனை கதவுகளில் பொருத்தி வைப்பதோடு அடுத்தவர்கள் வீட்டுக்கு போகிறபொழுது முக்கியமாக கைப்பைய்யில் போட்டு எடுத்து செல்ல வேண்டும்.
குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில் எல்லா வாண்டுகளும் கதவை அடைத்து தான் விளையாடும் ..நாம் குழந்தை உள்ள அறை கதவில் பொருத்தி விட்டு நம்ம அரட்டையை பார்க்கலாம்
மேலே சொன்ன பல பொருட்களும் ஒரு கிட் டாகவே குழந்தைகளுக்கான கடைகளில் கிடைக்கும்..
Friday, 12 November 2010
இப்ப உன்கிட்ட கிட்ட கேட்டேனா??
பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை..வழக்கம்போல் நான் காண்பிக்கும் மருத்துவரிடம் தான் கொண்டு போவேன்.எனக்கு தெரிந்தவர்களின் அட்வைஸ்
"நீங்க காம்மிக்கிற டாக்டர் சரியில்ல இல்லன்னா இப்படி அடிக்கடி சளி பிடிக்குமா"இது அவங்க
"ஏங்க அடிக்கடி சளி பிடிக்கிறதுக்கு டாக்டரா காரணம்..மகள் ஸ்கூளுக்கு போய் கொண்டு வர்ரது தான்..இது சகஜம் தான்" இப்படின்னு நான்
"அய்யோ பிள்ளைக பாரு சளி வந்து வந்து சோந்து போயிடுச்சுக(அப்படியொன்னும் அம்மா எனக்கே தோனலை) எங்க டாக்டர்ட கூட்டிட்டு போங்க நல்லா பாப்பார்"
தெரியாதனமா இதுக்கு நான் சொன்ன பதில் "இல்லைங்க எனக்கு இந்த டாக்டர் தான் பிடிச்சிருக்கு..தேவையில்லாம மருந்து எழுதி தள்ள மாட்டார்..மட்டுமில்ல த்வையில்லாம ஆண்டிபயாடிக்கும் தரமாட்டார்"..தேவையா எனக்கு??
அடுத்த நாள் அங்க ரவுன்ட் கட்டி குடும்பத்தோட நிக்கிறாங்க..அந்தம்மாவின் கணவர் எனக்கு அட்வைஸ்
"ஏங்க பிள்ளைக என்ன அவஸ்தை படுது(எனக்கில்லாத கவலையா உங்களுக்கு???)
எங்க டாக்டர் போனதும் ஒரு ஆண்டிபயாடிக் எழுதி தருவார் எல்லாமே சீக்கிரம் மாறிடும்(ஓஹ் அப்படியா சரி சரி)
மட்டுமல்ல பிறகு ரொம்ப நாளைக்கு வேற எதுவுமே வராது(அடேங்கப்பா சூப்பர் கண்டுபிடிப்பு)
நீங்க இப்படி இந்த டாக்டர்ட காமிப்பதனால தான் இப்படி..இந்தாள் சளிக்கு இருமலுக்கு சரியா மருந்து தர்ரதில்ல(போயா நீ வேலையா பாத்துட்டு)"
வயசுக்கு ரொம்ப பெரியவங்கன்னதால சும்மா இருந்துட்டேன்..தவறான கருத்துக்களை புரிஞ்சு வச்சதுமில்லாம அடுத்தவங்களுக்கு இது தான் சரின்னு அழுத்தமா சொல்லியும் கொடுக்க அப்பப்பா ரொம்ப திறமை தான் வேணும்.
அதென்னமோ நம்மாளுக நிறைய பேருக்கு இப்படி ஒரு ப்ரச்சனை இருக்கு..சின்ன குழந்தைகளுக்கு தேவையில்லாமல் இருமல் சளி மருந்து கொடுக்க கூடாது...நல்ல டாக்டர்கள் அதை தேவையில்லாமல் எழுதவும் மாட்டார்கள்
ஆண்டிபயாடிக் என்பது பேக்டீரியல் இன்ஃபெக்ஷனுக்காக தருவது அதற்கு மட்டும் தான் கேட்கும்..ஆனால் சாதாரணமாக குழந்தைகளுக்கு வைரல் இன்ஃபெக்ஷன் தான் அதிகம் வரும்...பேக்டீரியல் இன்ஃபெக்ஷன் என்றால் காய்ச்சல் ரொம்ப அதிகமாகவும் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்தும் போய் விடும்.
சில நல்ல டாக்டர்கள் ஓரிருநாள் பொறுத்து பார்ப்பார்கள்..சிலர் எனக்கென்ன போச்சு என்று முதல் முறையே எழுதி அனுப்பி விடுவார்கள்..அவங்களை எதுக்கு சொல்லனும்..நம்ப பேஷன்ட்ஸ் அப்படி..மருந்தே தரமாட்டார் அந்த டாக்டர் என்று தான் சொல்லுவாங்க.
இப்படி வேண்டாத அட்வைசை தேவையில்லாம அடுத்தவங்களுக்கு கொடுக்க வேண்டாமே.
"நீங்க காம்மிக்கிற டாக்டர் சரியில்ல இல்லன்னா இப்படி அடிக்கடி சளி பிடிக்குமா"இது அவங்க
"ஏங்க அடிக்கடி சளி பிடிக்கிறதுக்கு டாக்டரா காரணம்..மகள் ஸ்கூளுக்கு போய் கொண்டு வர்ரது தான்..இது சகஜம் தான்" இப்படின்னு நான்
"அய்யோ பிள்ளைக பாரு சளி வந்து வந்து சோந்து போயிடுச்சுக(அப்படியொன்னும் அம்மா எனக்கே தோனலை) எங்க டாக்டர்ட கூட்டிட்டு போங்க நல்லா பாப்பார்"
தெரியாதனமா இதுக்கு நான் சொன்ன பதில் "இல்லைங்க எனக்கு இந்த டாக்டர் தான் பிடிச்சிருக்கு..தேவையில்லாம மருந்து எழுதி தள்ள மாட்டார்..மட்டுமில்ல த்வையில்லாம ஆண்டிபயாடிக்கும் தரமாட்டார்"..தேவையா எனக்கு??
அடுத்த நாள் அங்க ரவுன்ட் கட்டி குடும்பத்தோட நிக்கிறாங்க..அந்தம்மாவின் கணவர் எனக்கு அட்வைஸ்
"ஏங்க பிள்ளைக என்ன அவஸ்தை படுது(எனக்கில்லாத கவலையா உங்களுக்கு???)
எங்க டாக்டர் போனதும் ஒரு ஆண்டிபயாடிக் எழுதி தருவார் எல்லாமே சீக்கிரம் மாறிடும்(ஓஹ் அப்படியா சரி சரி)
மட்டுமல்ல பிறகு ரொம்ப நாளைக்கு வேற எதுவுமே வராது(அடேங்கப்பா சூப்பர் கண்டுபிடிப்பு)
நீங்க இப்படி இந்த டாக்டர்ட காமிப்பதனால தான் இப்படி..இந்தாள் சளிக்கு இருமலுக்கு சரியா மருந்து தர்ரதில்ல(போயா நீ வேலையா பாத்துட்டு)"
வயசுக்கு ரொம்ப பெரியவங்கன்னதால சும்மா இருந்துட்டேன்..தவறான கருத்துக்களை புரிஞ்சு வச்சதுமில்லாம அடுத்தவங்களுக்கு இது தான் சரின்னு அழுத்தமா சொல்லியும் கொடுக்க அப்பப்பா ரொம்ப திறமை தான் வேணும்.
அதென்னமோ நம்மாளுக நிறைய பேருக்கு இப்படி ஒரு ப்ரச்சனை இருக்கு..சின்ன குழந்தைகளுக்கு தேவையில்லாமல் இருமல் சளி மருந்து கொடுக்க கூடாது...நல்ல டாக்டர்கள் அதை தேவையில்லாமல் எழுதவும் மாட்டார்கள்
ஆண்டிபயாடிக் என்பது பேக்டீரியல் இன்ஃபெக்ஷனுக்காக தருவது அதற்கு மட்டும் தான் கேட்கும்..ஆனால் சாதாரணமாக குழந்தைகளுக்கு வைரல் இன்ஃபெக்ஷன் தான் அதிகம் வரும்...பேக்டீரியல் இன்ஃபெக்ஷன் என்றால் காய்ச்சல் ரொம்ப அதிகமாகவும் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்தும் போய் விடும்.
சில நல்ல டாக்டர்கள் ஓரிருநாள் பொறுத்து பார்ப்பார்கள்..சிலர் எனக்கென்ன போச்சு என்று முதல் முறையே எழுதி அனுப்பி விடுவார்கள்..அவங்களை எதுக்கு சொல்லனும்..நம்ப பேஷன்ட்ஸ் அப்படி..மருந்தே தரமாட்டார் அந்த டாக்டர் என்று தான் சொல்லுவாங்க.
இப்படி வேண்டாத அட்வைசை தேவையில்லாம அடுத்தவங்களுக்கு கொடுக்க வேண்டாமே.
தொண்டை வலி
குழந்தைகளுக்கு தொண்டை வலி/ இன்ஃபெக்ஷன் இருந்தால் சின்ன வெங்காயம் 3 ஐ மிக்சியில் ஒரு அடி அடித்து சிறிது தண்ணீர் சேர்த்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் கல்கண்டு கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனால் கொடுக்கலாம்..தினம் இருவேளை இப்படி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்
பெரியவர்களுக்கும் இது நல்ல மருந்து தான்
பெரியவர்களுக்கும் இது நல்ல மருந்து தான்
Monday, 8 November 2010
அம்மாவுக்கு தான் லொள்ளு
ரெண்டு வாரம் முன்னாடி ஒரு தோழி வீட்டுக்கு போயிருந்தேன்...தோழி என் அம்மா வயதொத்த தோழி நான் தான் விவரமா ஆண்டின்னு கூப்பிட்டு கவுத்திருக்கனும்;-)...அக்கான்னு தான் கூப்பிடுவேன்.
இதுவரை அவங்களை தான் பாத்திருக்கேன் ஒழிய பிள்ளைகளை பார்த்தது கிடையாது.மூத்த பெண் போஸ்ட் க்ரேஜுவேஷன் முடிந்து வேலக்கு போகிறது..சுமார் 23 வயதிருக்கும்.
அன்று நான் போனபொழுது வேலை விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தர் மகள்..இவங்க என்னை காட்டி "இந்த ஆண்டியை தெரியுமா உனக்கு"
நான் ஒரு கண் துடிதுடிக்க விவேக் மாதிரி நிலைகுலைந்து விழலாம் என்று இருந்தேன் அப்ப சரியா அந்த பொண்ணு "ச்சீ ஆண்டியா போங்கம்மா..."என்று அக்கா என்று அழைத்தாள்....
எனக்கு மூச்சு வந்தது..ஹிஹீ
இந்த வயசை மறைச்சுட்டு குறைச்சுட்டு நடக்கும் கேஸ் நானில்லை என்றாலும் ஒரு நாலு வயசு வித்யாசத்துக்கு ஆண்டின்னெல்லாம் கூப்பிட்டா நான் பேஜாராகிடுவேன்னு நினைக்கிறேன்.
பரவாயில்லை பொண்ணு விவரமா தான் இருக்கு போணா போகட்டும்..
இந்த டிவியில பாத்திருக்கீங்களா...புதுசா கல்யாணம் ஆன சின்ன பசங்களையெல்லாம் கூட அன்கில் அன்கில் நு வெக்கமில்லாம கூப்பிடுவாங்க சில ஆன்கர் பொம்பளைகள்
இதுவரை அவங்களை தான் பாத்திருக்கேன் ஒழிய பிள்ளைகளை பார்த்தது கிடையாது.மூத்த பெண் போஸ்ட் க்ரேஜுவேஷன் முடிந்து வேலக்கு போகிறது..சுமார் 23 வயதிருக்கும்.
அன்று நான் போனபொழுது வேலை விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தர் மகள்..இவங்க என்னை காட்டி "இந்த ஆண்டியை தெரியுமா உனக்கு"
நான் ஒரு கண் துடிதுடிக்க விவேக் மாதிரி நிலைகுலைந்து விழலாம் என்று இருந்தேன் அப்ப சரியா அந்த பொண்ணு "ச்சீ ஆண்டியா போங்கம்மா..."என்று அக்கா என்று அழைத்தாள்....
எனக்கு மூச்சு வந்தது..ஹிஹீ
இந்த வயசை மறைச்சுட்டு குறைச்சுட்டு நடக்கும் கேஸ் நானில்லை என்றாலும் ஒரு நாலு வயசு வித்யாசத்துக்கு ஆண்டின்னெல்லாம் கூப்பிட்டா நான் பேஜாராகிடுவேன்னு நினைக்கிறேன்.
பரவாயில்லை பொண்ணு விவரமா தான் இருக்கு போணா போகட்டும்..
இந்த டிவியில பாத்திருக்கீங்களா...புதுசா கல்யாணம் ஆன சின்ன பசங்களையெல்லாம் கூட அன்கில் அன்கில் நு வெக்கமில்லாம கூப்பிடுவாங்க சில ஆன்கர் பொம்பளைகள்
Sunday, 7 November 2010
கீரை பாட்டி
எனக்கு வயது 12.எங்கள் வீதியில் காலை ஏழு மணிக்கெல்லாம் ஆஜராகிடுவார் கீரை பாட்டி.
"கரிசிலாங்கண்ணி,பொன்னாங்கன்னிகீரே,முருங்கை,அகத்திக்கீரே,கீரே கீரே கீரே "
இப்படி அவர் சவுன்ட் கொடுத்தால் வீதியே கேட்கும்...பச்சை பசேல் என்ற கீரையும் தலையில் கூடையுமான கீரை பாட்டி தான் சிறு வயது என்று வருகையில் என் மனதில் அடிக்கடி வந்து போகும் படம்.
கீரை பாட்டி பார்க்க ஐஸ்வர்யமாக இருப்பார்..தலையில் பெரிய கொண்டை அதை சுற்றி கறுப்பு வலையால் கொண்டையை பத்திரமாக கலையாமல் வைத்திருப்பார்..,லேசாக முன்னோக்கி நிற்கும் பல்லும் ,ஒல்லியாக தேகமுமாக அழகாக இருப்பார் பார்க்க.
ஒருநாள் அடுத்த வீதியில் கீரே கீரே கேக்குது..அம்மாவுக்கு அன்று கீரை வேண்டுமென்பதால் கீரை பாட்டியை மிஸ் பன்னிவிடாமல் நான் முன்னாடியே ஓடி போய் அழைக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த ரோட்டுக்க்கு போய்விடுவார்.
நான் பின்கதவு வழியாக சத்தம் கேட்டு எட்டி பார்த்தேன் கீரை பாட்டியை வர சொன்னேன்.
அன்றும் வழக்கம் போல் வந்தார்.அம்மா கீரை வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது பாட்டி கேட்டார்
"என்னாம்ணீ இன்னைக்கி 3 கட்டு கீரை"
"அண்ணன் வந்திருக்கார் பாட்டி..அண்ணனுக்கு கீரை ரொம்ப பிரியம்"சொன்னது அம்மா
"எந்த ஊருலிருந்தம்னி அவிக வந்தது?"
"துபாயிலிருந்து பாட்டி"
"அதேன் கீரைக்காசப்படுறார்..அங்கெல்லாம் வாடி வதங்கி போய் தானே கெடைக்கும்"
"அதெப்படி பாட்டி உங்களுக்கு தெரியும்" நான் கேட்டேன்
"துபாய் போனதில்லம்னீ ஆனா சிஙப்பூர்,மலேஷியா,பேங்காக் போயிருக்கேன்"
"என்ன பாட்டி சொல்றீங்க??" நான் ஆவலுடன்
"ஆமாம்மா தாத்தா இறந்தப்றம் கீரை விக்க வந்துட்டேன் அதுக்கு முன்ன இந்த மூனு ஊரு மட்டுமில்ல நம்ம நாட்டுல நான் சுத்தி பாக்காத ஊரு இல்ல தெரியுமா"
"எப்படி பாட்டி???நான் கேரளா மட்டும் தான் பாத்திருக்கேன்..அங்கெயெல்லாம் எப்படி போணீங்க"
"ப்லைட்டுல தேன்"
"போங்க பாட்டி விடாதீங்க..இதெல்லாம் ரீல் நம்ப மாட்டேன்..நீங்க ஃப்லைட்டுல போணீங்களா"
அசட்டு சிரிப்போடு என் அம்மாவை பார்த்து "புள்ளக்கி சந்தேகம் பாரம்னீ"
"கண்ணு நான் சொன்னா நம்ப மாட்டே..ஃப்லைட்ல ஏறினா தக்காளிப்பளமாட்டம் கொமரிக நம்ப சினிமா நடிகைகள காட்டிலும் அழகா இருப்பாங்க ஃப்லைட்ல முட்டாய் தருவாங்க,சாப்பாடு போடுவாங்க,சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க..ஃப்லைட்ல பறக்குறப்ப பெரிசா தெரியும் நம்ப வீடெல்லாம் மேல போக போக குட்ட்டியாகிடும்..அப்படியே மேகத்துக்குள்ள ஃப்லைட் பறக்கும்பாரு சினிமாவா நெசமான்னு நம்பவே முடியாது..உம்ம் அதெல்லாம் ஒரு காலம்
ஆனா கண்ணு அங்கன இருக்கும் டாய்லெட் நல்லா இருக்காது..வெள்ளைக்காரனுகளுக்கு அதான் போல சேர் போட்டாப்ல இருக்கும்.குட்டியா இருக்கும்..அங்கன இங்கன நிண்ணு திரிய எடம் பத்தாது"
"ஃப்லைடல இதெல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா பாட்டி" நான் நம்பவே இல்லை
"அட பாப்பாவுக்கு சந்தேகம் தீரவே இல்ல " என்று வாய் விட்டு ஒரு சிரிப்பி சிரித்து விட்டு சொன்னார்
"அப்பாருக்கு சொத்து சொகத்துல பஞ்சமே இருக்கல.கணேஸ்(மகன்) பொறந்துதல இருந்து எங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..ஊருல இருக்குற பல ஏக்கர் நெலம் எங்களுது தான்...அந்த காலத்துல எங்களுக்கு மாச வருமாணம் பல ஆயிரம்..அப்பாருக்கு ஊர் சுத்த ரொம்ப இஷ்டம் அதனால நாங்களும் ஒன்னா நல்லாவே சுத்தியிருக்கோம்
தாஜ் மஹால் கூட பாத்திருக்கேன்,உங்கூர்ல கூட போய் பல நாள் தங்கியிருக்கோம்..பைய்யன் கனேஸ் நல்லா படிப்பான்.ஒரே மகன்..வூட்டுக்கரருக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் இருந்தது..லிவர் போயிடுச்சு..அவுரு உடம்பு சரியில்லாம சீக்கிர செத்து போயிட்டாரு..யார் கண்ணு பட்டுச்சோ எப்படியெல்லாமோ எங்கள விதி துரத்த ஆரம்பிச்சுது...ஏக்கர் ஏக்காரா தோப்புக்களை விக்க வேண்டி வந்துச்சு.மிச்ச மீதி எதுவுமில்லாம வித்தோம்..எனக்கான ஒரே சொத்து எம்பைய்யன் கனேஸ் தான்"
இப்ப நான் சற்று மவுனமாகிவிட்டேன்..ஆனால் என் ஆவல் இன்னும் கூடிக் கொண்டே போனது..."இப்ப ஏன் பாட்டி கீரை விக்கிறீங்க"
கண்ணில் தரதரவென கண்ணீர்..நான் கொஞ்சம் பயந்து விட்டேன் ..தப்பா கேட்டுட்டேனோ என்று பயந்து விட்டேன்
என் முகமெல்லாம் மாறியதை கண்டு "பயப்புடாதே கண்ணு..கனேஸ் நல்லா படிப்பான்..சின்ன வயசுல நல்ல கான்வென்ட் ல படிக்க வச்சோம்.அவிக அப்பா இறந்தப்ரம் கவரமன்ட் பள்ளிக் கூடத்துக்கு மாத்திட்டேன்..பைய்யன் எதுவும் சொல்லாம நல்லா படிப்பான்...அவன் பள்ளுகூடத்துல அவந்தேன் எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்
பைய்யனுக்கு வக்கீலாகனும்னு ஆசை...ஆசைக்கேப்பா அவன் ராத்திரி பகலில்லாம படிப்பான்.பட்டப்படிப்பு முடிச்சான் மேற்படுப்பெல்லாம் படிச்சாணாத்தா...
அன்னிக்கு ஒரு நாள் ஓடி வந்தான் "அம்மா நல்ல வேலை கெடச்சுடுச்சுன்னு..இனி நீ கீரையெல்லாம் விக்காதேன்னான்
அவன் ப்ரெட்னுக இனிப்பு வேனும்னு கேட்டானுக..எல்லாருக்கும் இனிப்பும் வாங்கி மதியானம் சாப்பாடும் வச்சு ப்ரென்டுகளுக்கெல்லாம் விருந்து வச்சேன்..னைட் வரைக்கும் ப்ரென்டுகளோட அரட்டையடுச்சான்..அடுத்த நாளுக்கு வேலைக்கு சேரனும்..காலைல எழுந்து நேரமா குளிச்சு சாமி கும்பிட்டு புது வேலைக்கனுப்பலாம்னு போணேனாத்தா"
மறுபடியும் அழுகை..நிசப்தம்
"பாட்டி வேண்டாம் பாட்டி விட்ருங்க"
என்னை தட்டி தந்து விட்டு "காலைல கட்டில தூங்கிட்டிருந்தவனை எழுப்பினேன்...திரும்பாம படுத்திருந்தான் ...நான் திருப்பி போட்டேன் அவ்வா அவ்வா ந்னு என்னை கூப்பிடறான் வாய் வரல...நாக்கு சுருண்டுடுச்சு.கை கால் அசையல..உடம்பெல்லாம் மரத்து போச்சு..என்ற கண்ணுக்கென்னாச்சுன்னு எனக்கொண்ணும் புரியல..என்னை விட உசரமான எம்புள்ளைய என் மடியில இழுத்து வச்சுட்டு கத்தினேன்..பக்கத்துலிருந்து ஆளுக கூடி ஆஸ்பத்திரி கொண்டு போணோம்..வாதம்னு சொன்னாங்க..அதோட எல்லா கனவும் தீந்து போனது"
இது சொல்லி முடிக்க நானும் அம்மாவும் அழுதோம்
"இப்ப?" அம்மா தயக்கத்துடன்
"தங்கப்பல் அண்ணாச்சி கட தெரியுமாம்னீ??? அங்கன காலங்காத்தால 7 மணிக்கு ஓரமா ஒக்காந்திருப்பான் அதேன் என் கணேஸ்"
என்னால் நம்ப முடியவில்லை...ஒரு கறுப்பு சட்டையும் சில புத்தகங்களுமாக ஒரு கம்பீரமான வக்கீலை நான் கர்ப்பனை செய்து வைத்திருந்தேன்.
அண்ணாச்சிக்கடையில் நான் பார்த்த கணேஸ் ஒடிந்து போன உருவம்,இழுத்து இழுத்து உடம்பை தள்ளி கொஞ்சம் தூரம் போக முடியும்..என்னவோ பேசுவார்..வழக்கமாக கேட்பதால் தங்கப்பல் அண்ணாச்சிக்கு மட்டும் சிலது புரியும்..நான் அதுநாள் வரை ஏதோ ஒரு மனநோயாளி என்று நினைத்திருந்தேன்"
"இப்ப அம்மான்னு கூப்பிடுவாம்மா..வேறெதுவும் வெளங்காது..வகீலு பேசாம போனா எப்படிம்மா??.ஆனா நான் பெத்தவளாச்சே எம்புள்ள பேச்சு எனக்கு புரியும்..எங்கண்ணு அம்மா நான் ஒரு நா வக்கீலாவேன்னு தான் இன்னிக்கும் சொல்லிகிட்டிருக்கு"
கண்ணை துடைத்து விட்டு மீதி காசை தந்து விட்டு வார்த சிரிப்பை வரவழைத்து விட்டு எழுந்து போய் விட்டார்..
"கரிசிலாங்கண்ணி,பொன்னாங்கன்னிகீரே,முருங்கை,அகத்திக்கீரே,கீரே கீரே கீரே "
இப்படி அவர் சவுன்ட் கொடுத்தால் வீதியே கேட்கும்...பச்சை பசேல் என்ற கீரையும் தலையில் கூடையுமான கீரை பாட்டி தான் சிறு வயது என்று வருகையில் என் மனதில் அடிக்கடி வந்து போகும் படம்.
கீரை பாட்டி பார்க்க ஐஸ்வர்யமாக இருப்பார்..தலையில் பெரிய கொண்டை அதை சுற்றி கறுப்பு வலையால் கொண்டையை பத்திரமாக கலையாமல் வைத்திருப்பார்..,லேசாக முன்னோக்கி நிற்கும் பல்லும் ,ஒல்லியாக தேகமுமாக அழகாக இருப்பார் பார்க்க.
ஒருநாள் அடுத்த வீதியில் கீரே கீரே கேக்குது..அம்மாவுக்கு அன்று கீரை வேண்டுமென்பதால் கீரை பாட்டியை மிஸ் பன்னிவிடாமல் நான் முன்னாடியே ஓடி போய் அழைக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த ரோட்டுக்க்கு போய்விடுவார்.
நான் பின்கதவு வழியாக சத்தம் கேட்டு எட்டி பார்த்தேன் கீரை பாட்டியை வர சொன்னேன்.
அன்றும் வழக்கம் போல் வந்தார்.அம்மா கீரை வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது பாட்டி கேட்டார்
"என்னாம்ணீ இன்னைக்கி 3 கட்டு கீரை"
"அண்ணன் வந்திருக்கார் பாட்டி..அண்ணனுக்கு கீரை ரொம்ப பிரியம்"சொன்னது அம்மா
"எந்த ஊருலிருந்தம்னி அவிக வந்தது?"
"துபாயிலிருந்து பாட்டி"
"அதேன் கீரைக்காசப்படுறார்..அங்கெல்லாம் வாடி வதங்கி போய் தானே கெடைக்கும்"
"அதெப்படி பாட்டி உங்களுக்கு தெரியும்" நான் கேட்டேன்
"துபாய் போனதில்லம்னீ ஆனா சிஙப்பூர்,மலேஷியா,பேங்காக் போயிருக்கேன்"
"என்ன பாட்டி சொல்றீங்க??" நான் ஆவலுடன்
"ஆமாம்மா தாத்தா இறந்தப்றம் கீரை விக்க வந்துட்டேன் அதுக்கு முன்ன இந்த மூனு ஊரு மட்டுமில்ல நம்ம நாட்டுல நான் சுத்தி பாக்காத ஊரு இல்ல தெரியுமா"
"எப்படி பாட்டி???நான் கேரளா மட்டும் தான் பாத்திருக்கேன்..அங்கெயெல்லாம் எப்படி போணீங்க"
"ப்லைட்டுல தேன்"
"போங்க பாட்டி விடாதீங்க..இதெல்லாம் ரீல் நம்ப மாட்டேன்..நீங்க ஃப்லைட்டுல போணீங்களா"
அசட்டு சிரிப்போடு என் அம்மாவை பார்த்து "புள்ளக்கி சந்தேகம் பாரம்னீ"
"கண்ணு நான் சொன்னா நம்ப மாட்டே..ஃப்லைட்ல ஏறினா தக்காளிப்பளமாட்டம் கொமரிக நம்ப சினிமா நடிகைகள காட்டிலும் அழகா இருப்பாங்க ஃப்லைட்ல முட்டாய் தருவாங்க,சாப்பாடு போடுவாங்க,சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க..ஃப்லைட்ல பறக்குறப்ப பெரிசா தெரியும் நம்ப வீடெல்லாம் மேல போக போக குட்ட்டியாகிடும்..அப்படியே மேகத்துக்குள்ள ஃப்லைட் பறக்கும்பாரு சினிமாவா நெசமான்னு நம்பவே முடியாது..உம்ம் அதெல்லாம் ஒரு காலம்
ஆனா கண்ணு அங்கன இருக்கும் டாய்லெட் நல்லா இருக்காது..வெள்ளைக்காரனுகளுக்கு அதான் போல சேர் போட்டாப்ல இருக்கும்.குட்டியா இருக்கும்..அங்கன இங்கன நிண்ணு திரிய எடம் பத்தாது"
"ஃப்லைடல இதெல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா பாட்டி" நான் நம்பவே இல்லை
"அட பாப்பாவுக்கு சந்தேகம் தீரவே இல்ல " என்று வாய் விட்டு ஒரு சிரிப்பி சிரித்து விட்டு சொன்னார்
"அப்பாருக்கு சொத்து சொகத்துல பஞ்சமே இருக்கல.கணேஸ்(மகன்) பொறந்துதல இருந்து எங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..ஊருல இருக்குற பல ஏக்கர் நெலம் எங்களுது தான்...அந்த காலத்துல எங்களுக்கு மாச வருமாணம் பல ஆயிரம்..அப்பாருக்கு ஊர் சுத்த ரொம்ப இஷ்டம் அதனால நாங்களும் ஒன்னா நல்லாவே சுத்தியிருக்கோம்
தாஜ் மஹால் கூட பாத்திருக்கேன்,உங்கூர்ல கூட போய் பல நாள் தங்கியிருக்கோம்..பைய்யன் கனேஸ் நல்லா படிப்பான்.ஒரே மகன்..வூட்டுக்கரருக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் இருந்தது..லிவர் போயிடுச்சு..அவுரு உடம்பு சரியில்லாம சீக்கிர செத்து போயிட்டாரு..யார் கண்ணு பட்டுச்சோ எப்படியெல்லாமோ எங்கள விதி துரத்த ஆரம்பிச்சுது...ஏக்கர் ஏக்காரா தோப்புக்களை விக்க வேண்டி வந்துச்சு.மிச்ச மீதி எதுவுமில்லாம வித்தோம்..எனக்கான ஒரே சொத்து எம்பைய்யன் கனேஸ் தான்"
இப்ப நான் சற்று மவுனமாகிவிட்டேன்..ஆனால் என் ஆவல் இன்னும் கூடிக் கொண்டே போனது..."இப்ப ஏன் பாட்டி கீரை விக்கிறீங்க"
கண்ணில் தரதரவென கண்ணீர்..நான் கொஞ்சம் பயந்து விட்டேன் ..தப்பா கேட்டுட்டேனோ என்று பயந்து விட்டேன்
என் முகமெல்லாம் மாறியதை கண்டு "பயப்புடாதே கண்ணு..கனேஸ் நல்லா படிப்பான்..சின்ன வயசுல நல்ல கான்வென்ட் ல படிக்க வச்சோம்.அவிக அப்பா இறந்தப்ரம் கவரமன்ட் பள்ளிக் கூடத்துக்கு மாத்திட்டேன்..பைய்யன் எதுவும் சொல்லாம நல்லா படிப்பான்...அவன் பள்ளுகூடத்துல அவந்தேன் எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்
பைய்யனுக்கு வக்கீலாகனும்னு ஆசை...ஆசைக்கேப்பா அவன் ராத்திரி பகலில்லாம படிப்பான்.பட்டப்படிப்பு முடிச்சான் மேற்படுப்பெல்லாம் படிச்சாணாத்தா...
அன்னிக்கு ஒரு நாள் ஓடி வந்தான் "அம்மா நல்ல வேலை கெடச்சுடுச்சுன்னு..இனி நீ கீரையெல்லாம் விக்காதேன்னான்
அவன் ப்ரெட்னுக இனிப்பு வேனும்னு கேட்டானுக..எல்லாருக்கும் இனிப்பும் வாங்கி மதியானம் சாப்பாடும் வச்சு ப்ரென்டுகளுக்கெல்லாம் விருந்து வச்சேன்..னைட் வரைக்கும் ப்ரென்டுகளோட அரட்டையடுச்சான்..அடுத்த நாளுக்கு வேலைக்கு சேரனும்..காலைல எழுந்து நேரமா குளிச்சு சாமி கும்பிட்டு புது வேலைக்கனுப்பலாம்னு போணேனாத்தா"
மறுபடியும் அழுகை..நிசப்தம்
"பாட்டி வேண்டாம் பாட்டி விட்ருங்க"
என்னை தட்டி தந்து விட்டு "காலைல கட்டில தூங்கிட்டிருந்தவனை எழுப்பினேன்...திரும்பாம படுத்திருந்தான் ...நான் திருப்பி போட்டேன் அவ்வா அவ்வா ந்னு என்னை கூப்பிடறான் வாய் வரல...நாக்கு சுருண்டுடுச்சு.கை கால் அசையல..உடம்பெல்லாம் மரத்து போச்சு..என்ற கண்ணுக்கென்னாச்சுன்னு எனக்கொண்ணும் புரியல..என்னை விட உசரமான எம்புள்ளைய என் மடியில இழுத்து வச்சுட்டு கத்தினேன்..பக்கத்துலிருந்து ஆளுக கூடி ஆஸ்பத்திரி கொண்டு போணோம்..வாதம்னு சொன்னாங்க..அதோட எல்லா கனவும் தீந்து போனது"
இது சொல்லி முடிக்க நானும் அம்மாவும் அழுதோம்
"இப்ப?" அம்மா தயக்கத்துடன்
"தங்கப்பல் அண்ணாச்சி கட தெரியுமாம்னீ??? அங்கன காலங்காத்தால 7 மணிக்கு ஓரமா ஒக்காந்திருப்பான் அதேன் என் கணேஸ்"
என்னால் நம்ப முடியவில்லை...ஒரு கறுப்பு சட்டையும் சில புத்தகங்களுமாக ஒரு கம்பீரமான வக்கீலை நான் கர்ப்பனை செய்து வைத்திருந்தேன்.
அண்ணாச்சிக்கடையில் நான் பார்த்த கணேஸ் ஒடிந்து போன உருவம்,இழுத்து இழுத்து உடம்பை தள்ளி கொஞ்சம் தூரம் போக முடியும்..என்னவோ பேசுவார்..வழக்கமாக கேட்பதால் தங்கப்பல் அண்ணாச்சிக்கு மட்டும் சிலது புரியும்..நான் அதுநாள் வரை ஏதோ ஒரு மனநோயாளி என்று நினைத்திருந்தேன்"
"இப்ப அம்மான்னு கூப்பிடுவாம்மா..வேறெதுவும் வெளங்காது..வகீலு பேசாம போனா எப்படிம்மா??.ஆனா நான் பெத்தவளாச்சே எம்புள்ள பேச்சு எனக்கு புரியும்..எங்கண்ணு அம்மா நான் ஒரு நா வக்கீலாவேன்னு தான் இன்னிக்கும் சொல்லிகிட்டிருக்கு"
கண்ணை துடைத்து விட்டு மீதி காசை தந்து விட்டு வார்த சிரிப்பை வரவழைத்து விட்டு எழுந்து போய் விட்டார்..
Friday, 5 November 2010
ஊருக்கு போறீங்களா??
வெளிநாட்டில் உள்ளவர்கள் ஊருக்கு போகும்போதும் சரி ஊருக்கு போய் வந்ததும் சரி எல்லா பொருட்களும் அலைமோதும் அதில் பல முக்கியமானவைகள் காணாமற்போகும்
எப்பொழுதும் ஊரில் இருக்கும்போது என்று தனியாக ஒரு ட்ரேவெல் பேக் வைத்து அதில் ஊரிலுள்ள லாக்கர் சாவி,அங்கு உபயோகிக்கும் க்ரெடிட் கார்டுகள்,அங்கு உபயோகிக்கும் சிம் கார்டுகள்,அங்கு பயணிக்கும்பொழுது உபயோகிக்கும் ட்ராளியின் சாவிகள் முதலியவற்றை வைக்கலாம்
இந்த மாதிரி விஷயங்களை அங்கு போய் தேட வேண்டாம்
எப்பொழுதும் ஊரில் இருக்கும்போது என்று தனியாக ஒரு ட்ரேவெல் பேக் வைத்து அதில் ஊரிலுள்ள லாக்கர் சாவி,அங்கு உபயோகிக்கும் க்ரெடிட் கார்டுகள்,அங்கு உபயோகிக்கும் சிம் கார்டுகள்,அங்கு பயணிக்கும்பொழுது உபயோகிக்கும் ட்ராளியின் சாவிகள் முதலியவற்றை வைக்கலாம்
இந்த மாதிரி விஷயங்களை அங்கு போய் தேட வேண்டாம்
Subscribe to:
Posts (Atom)


