Pages

Showing posts with label சொந்த கதை. Show all posts
Showing posts with label சொந்த கதை. Show all posts

Tuesday, 2 November 2010

ரொம்ம்ம்ப பெரிய்ய பாடகர்

நான் சின்ன வயதில் இந்த பாட்டு கேசட்டை எங்க பாத்தாலும் அதன் கவரில் யார் பாடியிருக்கா என்று படிப்பேன்..ஊரில் வாலிப வயதில் நிறிய மாமாக்க்ள் இருந்ததால் அவர்களுடைய பழைய கேசட் கலெக்ஷனிலும் எல்லாம் படித்து பார்ப்பேன்.
  ஒரு நாள் வீட்டில் எல்லோரும் மதியம் சாப்பாடு முடிந்து அரட்டை போட்டுட்டிருந்தாங்க..நானும் நடுவே போய் நிக்கவும்..அம்மா கேட்டாங்க இத்தனை நேரம் எங்க போயிருந்தேன்னு..நான் சொன்னேன் அம்மா கேசட்டை படிச்சுட்டிருந்தேன்
  பிறகு என் சந்தேகத்தையும் அவிழ்த்து விட்டேன்
"அம்மா இந்த கோரஸ் கோரஸ் நு சொல்ரவரு ரொம்ப பெரிய பாடகரா இருப்பார் போல...நிறைய பாட்டு அவர் தான் பாடியிருக்கார்"
  இது சொல்லி முடித்தேன்...எல்லாரும் டைனிங் டேபிளில் சிரித்து சிரித்து படுத்து விட்டார்கள்..ஏனென்று பின்னாடி தான் புரிந்தது
  அது வரை கோரஸ் ஒரு க்ரிஸ்டியனா இருப்பார்  என்று கூட நினைத்து வைத்திருந்தேன்:-(