Pages

Friday, 5 November 2010

விபத்துக்கள்

எதிர்பாராமல் சில விபத்துக்கள் யாருக்கும் எப்பொழுதும் ஏற்படலாம்..உதாரணத்திற்கு தீ விபத்து .எவ்வளவோ குடும்பங்களில் தீ விபத்துக்கள் நேர்ந்தால் பிறகு மிச்ச மீதி எதுவுமே இருக்காது.
  என்றுமே முக்கியமான டாக்யுமென்ட்ஸை ஒரே இடத்தில் வைக்க வேண்டும்...நமது வார்ட்ரோபிலேயே ஒரு இடத்தில் வேறேதையும் வைக்காமல் அதில் ஒரு சூட்கேசினுல் எல்லா முக்கியமானவைகளையும் வைக்கலாம்.
    1)குடும்ப அங்கத்தினர்களுடைய பாஸ்போர்டுகளை ஒரு சின்ன பாஸ்போர்ட் பேகில் வைக்கலாம்
    2)நாம் படித்த செர்டிஃபிக்கேட்டுகளை எல்லாம் ஒரு பைய்யில் அடுக்கி வைக்கலாம்
    3)நகைகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தால் இடையிடையே தங்க நாணயங்களையும் வாங்கி சில நாணயங்களை அதில் போட்டு வைக்கலாம்
    மேற்கண்ட எல்லாவற்றையும் ஒரே பெட்டியில் வைத்தால் அவசரத்திற்கு எடுத்துக் கொண்டு ஓட வசதியாக இருக்கும் 
   

Thursday, 4 November 2010

நடை உடை பாவனை

  அழகு என்று வரும்போது அதனை சொல்லும் வரிசையில் கூட நடை தான் முன்னாடி வருது..பிறகு தான் நம் உடையும் பாவனையும்.
   ஒரு மனுஷன் அழகா தெரியனும்னா முதலில் ஒழுங்கா நடக்க பழகனும்.அதுக்காக கேட் வாக் எல்லாம் வேண்டாம்...முதுகை வளைக்காமல் தோளை தளர்த்தாமல் நடக்க வேண்டும்.
   பிறகு சிலர் காலை தேய்த்து தேய்த்து நடப்பார்கள் ..பார்க்க சஹிக்காது.சின்ன குழந்தைகளாக இருக்கும்போதே இது மாதிரி விஷயங்களை சொல்லி சரி செய்து விடலாம்..அப்ப அது பழக்கத்தில் வரும்.சில பிள்ளைகள் சும்மா நிக்கிறப்பவே கால் இரண்டையும் அப்படியே முடிச்சு போட்ட மாதிரி ஒன்றின் பின் ஒன்றை வளைத்துக் கொண்டு நிற்பார்கள்.
   என்ன தான் அழகு பதுமையா இருந்தாலும் வயிற்றை தள்ளிக் கொண்டு நிக்கிறது,கூன் போட்டுக் கொண்டு நிக்கிறது நல்லாவே இருக்காது.
  ஆண் பிள்ளைகள் கூட சின்ன வயதில் ஒரு மாதிரி பெண்கள் போல நடப்பதாக இருந்தால் நல்ல முறையில் எடுத்து சொல்லி நடையை மாற்றலாம்.
  நான் பார்த்து நம் கர்பிணிகள்  ரொம்பவுமே ஒரு மாதிரி தான் நடக்கிறாங்க...மனசில் எதுவோ பெரிய நோய் வந்து விட்டது போல கர்ப்பனை பண்ணிக் கொள்வதால் தான் அப்படி சோந்து போய் முதுகை தள்ளி நடக்கிறாங்க..
  இதை பற்றி நான் நோட் பன்னினது ஒருமுறை ஒரு பாகிஸ்தானி பெண் என்னிடம் கேட்டார் ஏன் உங்க ஊர் பெண்கள் மட்டும் கர்பமானால் இப்படி சோந்து போயிடறீங்க நடக்கவே உயிரில்லாத மாதிரி தெரியுறீங்க என்று..அதன் பின் தான் எனக்கும் தோன்றியது.
   இது ஒரு இயற்கையான விஷயம் சின்ன சின்ன அசவுகரியங்கள் ரொம்ப சகஜம் அதையே பெரிசா மனதில் போட்டுக்காம எப்பவும் போல நடந்தால் பார்க்க ஒரு மாதிரியா இருக்காது.
  என்ன நான் சொல்றது?
 

Tuesday, 2 November 2010

ரொம்ம்ம்ப பெரிய்ய பாடகர்

நான் சின்ன வயதில் இந்த பாட்டு கேசட்டை எங்க பாத்தாலும் அதன் கவரில் யார் பாடியிருக்கா என்று படிப்பேன்..ஊரில் வாலிப வயதில் நிறிய மாமாக்க்ள் இருந்ததால் அவர்களுடைய பழைய கேசட் கலெக்ஷனிலும் எல்லாம் படித்து பார்ப்பேன்.
  ஒரு நாள் வீட்டில் எல்லோரும் மதியம் சாப்பாடு முடிந்து அரட்டை போட்டுட்டிருந்தாங்க..நானும் நடுவே போய் நிக்கவும்..அம்மா கேட்டாங்க இத்தனை நேரம் எங்க போயிருந்தேன்னு..நான் சொன்னேன் அம்மா கேசட்டை படிச்சுட்டிருந்தேன்
  பிறகு என் சந்தேகத்தையும் அவிழ்த்து விட்டேன்
"அம்மா இந்த கோரஸ் கோரஸ் நு சொல்ரவரு ரொம்ப பெரிய பாடகரா இருப்பார் போல...நிறைய பாட்டு அவர் தான் பாடியிருக்கார்"
  இது சொல்லி முடித்தேன்...எல்லாரும் டைனிங் டேபிளில் சிரித்து சிரித்து படுத்து விட்டார்கள்..ஏனென்று பின்னாடி தான் புரிந்தது
  அது வரை கோரஸ் ஒரு க்ரிஸ்டியனா இருப்பார்  என்று கூட நினைத்து வைத்திருந்தேன்:-(

நானா கெடச்சேன்??


   சில வருடங்களுக்கு முன்பு இங்கு நான் மதியம் ஹாஸ்பிடலுக்கு போய்விட்டு திரும்பி வறேன்..சரியா ஒரு மணி ஆகிட்டதால சாலையில் ஒரே ட்ராஃபிக் ஜாமாகிவிட்டது..நிக்கிறேன் நிக்கிறேன் டாக்சியை காணோம்.
  உச்சி வெயில் வேறு..வயிறு ஒரு பக்கம் வா வாங்குது.45 நிமிஷம் நின்னுட்டேன் என்ன செய்றதுன்னே தெரியல..அப்ப சரியா அதே இடத்தில் பார்க் பன்னியிருந்த ஒரு காரில் இருந்து ஒரு பெண் எட்டி பாத்து லிஃப்ட் வேனுமா என்றாள்..முதலில் குழம்பி போய் அருகில் சென்று பார்த்தேன் சுமார் 25 வயது மதிகத்தக்க ஒரு பெண் எங்கு போறீங்க என்றாள்...இன்ன இடம் என்றதும் நானும் அங்கு பேகரிக்கு தான் போகிறேன் லிஃப்ட் தரவா என்று கேட்டாள்..பார்த்தால் நல்ல குடும்ப பெண் போல் இருக்கிறாள் என்று கணவரிடம் ஃபோன் பன்னி கேட்டேன் ..அவருக்கு நைசாக கார் நம்பரை சொல்லிவிட்டு நான் காணாம் போனேன்ன என்னை தேடி கண்டுபுடிக்க ஏதுவா இருக்கும்னு சொன்னேன்:-)..பிறகு ஏறி உட்கார போணேன்..அப்ப தான் அவ வில்லங்கம் புரிந்தது.
    அவ கைய்யில் 1 வயதொத்த அவளது குழந்தை அதனை மடியில் வச்சுட்டு பின்னாடி உக்காறுவீங்களா ப்லீஸ் என்றாள்..அட பாவி என்னை பேபி சிட்டிங் பன்ன தான் கூப்பிட்டியா என்று மனசில் நினைத்துக் கொண்டே லட்டு போன்ற குழந்தையை வாங்கி மடியில் வைத்து பின்னால் உட்கார்ந்து கொண்டேன்..
  அப்பப்பா பிறகு நடந்ததெதுவும் நினைவிலில்லை..எல்லாம் அந்த குழந்தை பன்னின கூத்து...உருளுதா பிறளுதா ஓடுதா குதிக்குதா என்னையும் சப் சப்புன்னு அடி வேற ..அதுக்கு செம்ம பசி போல...

  பிறகு அம்மா சொன்னாள் பின்னாடி இருக்கும் பேகில் பால் புட்டி இருக்கும் அதை கொடுப்பீங்களா என்று...அம்மா தங்கமே முதல்ல அத கொடு என்று பாட்டில வாங்கி குழந்தைக்கு கொடுத்தேன்..மெல்ல அது குடித்து அளும்பு குறைந்ததும் எங்கள் இடம் வந்தது அங்கு தான் பேகரியும்.
  இறங்கி எனக்கு நன்றி சொல்ல மனசில்லாமல் நிக்கிறப்பவே அவள் காலில் விழாத குறையாக எனக்கு ஒரு பெரிய நன்றி சொன்னாள்..பொறுக்க முடியாமல் கேட்டேன் நான் இல்லையென்றால் என்ன செய்திருப்பாய் என்று.
   அதெல்லாம் பாத்தா ஷாப்பிங் போக முடியுமா மடியில் வச்சுட்டே ஓட்டுவேன் என்றாள் படுபாவி

பிரியாணி

பிரியாணிக்கு நெய்யை தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை..விருந்தினர்கள் வருகையில் மட்டும் நெய் கொண்டும் அல்லாத சமயத்தில் நமக்கு மட்டும் என்றால் சூரியகாந்தி எண்ணை அல்லது தேங்காய் எண்ணை கொண்டும் செய்யலாம்..கடைசியில் 1 ஸ்பூன் நெய்யை விரும்பினால் சேர்த்து இறக்கிக் கொள்ளலாம்.
  மேலே படத்தில் காண்பது  இறால் பிரியாணி

குழந்தைகளுக்கு எழுத்து

எழுத்துக்களை கற்றுக் கொள்ளும் சுமார் மூன்று நாலு வயதில் பிள்ளைகளுக்கு பல எழுத்துக்களும் அதுவா இதுவா என்று குழப்பமாக இருக்கும்.ரொம்ப அதுகளை தொந்தரவு செய்யாமல் ஒரு 30 நிமிடம் படிக்க வைத்து விட்டு முக்கியமானவைகளை அல்லது குழப்பும் எழுத்துக்களை சுவற்றில் பெரியதாக எழுதி கலரடித்து ஒட்டிவிடலாம்...அவர்கள் விளையாட்டுக் கிடையில் அவ்வெழுத்துக்களை பார்த்து தானாக சீக்கிரம் மனதில் பதியும்.
   என் வீட்டில் எப்ப்பொழுதுமே சுவற்றில் மகளது பாடங்கள் இருக்கும்.நான் என் மகளுக்கு ஸ்டூடென்ட் போல உக்காந்து கொள்வேன்...அப்பப்ப நல்ல கொட்டு விழுந்தாலும் கூட நான் அதிகம் கஷ்டப்படாமல் அவள் எனக்கு டீச்சராக சொல்லி தந்தே படித்து விடுவாள்.

எண்ணையில் தேதி

இப்பல்லாம் எல்லாருமே உணவு விஷயத்தில் ரொம்பவுமே கட்டுப்பாடோடு தான் இருக்கோம்.
 சாதாரண சமையலுக்கு பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணையை பிரிக்கும் அன்று அந்த பாட்டிலிண் மேல் பெர்மனென்ட் மார்கர் கொண்டு தேதியை குறித்து வைத்து விடலாம்...பிறகு அது தீரும்பொழுது எத்தனை நாளுக்கு வந்தது என்று சரியாக கணக்கு தெரியும்.இப்படி தொடர்ந்து செய்வதால் எண்ணை செலவில் நம்மையறியாமல் ஒரு கட்டுப்பாடு வந்து விடும்